92. The Night
1
وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
2
وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
3
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
4
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
5
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
6
وَصَدَّقَ بِالْحُسْنَىٰ
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
7
فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
8
وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
9
وَكَذَّبَ بِالْحُسْنَىٰ
இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
10
فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ
அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
11
وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ
ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
12
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
13
وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ
அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
14
فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ
ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
15
لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى
மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
16
الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ
எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
17
وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى
ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
18
الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ
(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
19
وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ
மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
20
إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ
மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
21
وَلَسَوْفَ يَرْضَىٰ
வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.