100. Those That Run

1
وَالْعَادِيَاتِ ضَبْحًا
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
2
فَالْمُورِيَاتِ قَدْحًا
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
3
فَالْمُغِيرَاتِ صُبْحًا
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
4
فَأَثَرْنَ بِهِ نَقْعًا
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
5
فَوَسَطْنَ بِهِ جَمْعًا
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
6
إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
7
وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
8
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
9
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
10
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
11
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
CopyRight © 2024 Koran.link All Rights Reserved