85. The Big Stars

1
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ
கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
2
وَالْيَوْمِ الْمَوْعُودِ
இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
3
وَشَاهِدٍ وَمَشْهُودٍ
மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
4
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ
(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.
5
النَّارِ ذَاتِ الْوَقُودِ
விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
6
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ
அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
7
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ
முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
8
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ
(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
9
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
10
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
11
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
12
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
13
إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ
நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
14
وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ
அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
15
ذُو الْعَرْشِ الْمَجِيدُ
(அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன்.
16
فَعَّالٌ لِّمَا يُرِيدُ
தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
17
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
18
فِرْعَوْنَ وَثَمُودَ
ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
19
بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ
எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
20
وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ
ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
21
بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ
(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
22
فِي لَوْحٍ مَّحْفُوظٍ
(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.
CopyRight © 2024 Koran.link All Rights Reserved