90. The City

1
لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
2
وَأَنتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
3
وَوَالِدٍ وَمَا وَلَدَ
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
4
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
5
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
6
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا
"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.
7
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌ
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
8
أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
9
وَلِسَانًا وَشَفَتَيْنِ
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
10
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
11
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
12
وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
13
فَكُّ رَقَبَةٍ
(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
14
أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
15
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
உறவினனான ஓர் அநாதைக்கோ,
16
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
17
ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
18
أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
19
وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
20
عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.
CopyRight © 2024 Koran.link All Rights Reserved